ஆந்திர மாநிலத்தில் அவதார புருஷர்களின் வேடத்தில் நடித்தே அரசியலில் அற்புதங்களை நிகழ்த்திய என்.டி ராமராவ் பாணியில் தமிழக அரசியலில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அற்புதங்கள் நிகழ்த்துவார் என்று அரசியல் சோதிடர்கள் கணிக்கின்றனர். அவர் மூக்கை சொரிந்தாலும் மவுனம் சாதித்தாலும் ஊடகங்கள் கடமை விவாதப் பொருளாக்கிவிடுவதை பார்க்கிறபொழுது, அவரை அரசியல் ஹிரோவாக்க கண்ணுக்கு புலப்படாத சக்திகள் இயங்குவதை ஊகிக்க முடிகிறது.
ஊடகங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடி ,கும்பல் வன்முறை, மதவாத அரசியல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சூரையாடுவதைப் பற்றிய விவாதங்களை நடத்தாமல் இப்படி பொருளற்ற விவாதங்களை நடத்தப்படுவதையே ஆட்சியாளர்களும் கார்ப்பரேட்டுகளும் விரும்புகின்றனர்
.. இந்திய அரசாங்கத்தை தூய்மைப்படுத்த பாரதமாதா தவமிருந்து பெற்றெடுத்த புதல்வர அருள்மிகு மோடி என்றும் தமிழக அரசியலை தூய்மைப்படுத்த ஆன்மீக ஹிரோ ரஜனி என்றும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பா.ஜ.க பொன்னார் கூறுவதை இந்த ஊடகங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன..
கருணா நிதியை மக்கள் அபூர்வ பிறவியாக பார்த்தார்கள், எ ம் ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் தெய்வ பிறவியாக பார்த்தனர். அம்மா ஜெயலலிதா தெய்வ பிறவி என மக்கள் நம்பியதால்தான் அரசு நிலத்தை அபகரித்த வழக்கிலும், கொடைக்கானல் ஹோட்டல் வழக்கிலும் தண்டனை பெற்ற போதிலும். பின்னர் சில ஆயிரம் கோடிகள் சொத்துகுவிப்பு வழக்கிலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும், நடந்த தேர்தல்களில் கூட்டணி இல்லாமலே பெரும்பாண்மை பெற்று ஆட்சியில் அமர முடிந்தது. இது எதைக் காட்டுகிறது? அந்த அம்மையாரை மக்கள் தெய்வ பிறவியாக பார்த்தார்கள் என்பது தானே உண்மை என்கிறார்கள்.
இன்று வழிகாட்ட ஒரு ஹிரோ இல்லாத நிலையில் அரசியல் கெட்டு கிடப்பதாக கூறி ரஜனி மவுனத்தைக் கலைத்தார்.
அந்த அம்மையாரையே ரஜனி வாய்ஸ் கொடுத்த தால்தான் கலைஞரால் தோற்கடிக்க முடிந்தது என்பதைக் காட்டி ரஜனி வாய்சின் செல்வாக்கு பற்றி ஊடகங்களில் வாயாடிகள் நுரைகக்க வாதாட துவங்கிவிட்டனர்.
இந்திய அரசியலில் மக்களின் ஹிரோஒர்ஷிப் மனப்பாங்கே தீர்மாணிக்கிற சக்தியாக இருப்பதை மறுக்க இயலாது. நாடாளுமன்ற ஜனநாயகமோ, சோசலிச ஜனநாயகமோ இரண்டிற்கும் எமனாக இருப்பது மக்களின் நாயக் வழிபாட்டு (Hero overship)உணர்வே ஆகும். சர்வாதிகார ஆட்சிமுறைக்கு அது உறுதியான பாதை போட்டுவிடுகிறது என்பதை அனுபவங்கள் காட்டுகின்றன.
இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தை தயாரித்த குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கரும் இதனை உணர்ந்திருந்தார். 1949ம் ஆண்டே அரசியல் நிர்ணய சட்டத்தின் உயிர் நாடி அதன் 32வது பிரிவு என்றும் அது தனிநபரின் உயிர்வாழும் உரிமையை காக்கும் கேடயமாகும் .அரசியலில் நாயகர் வழிபாடு ,அந்த பிரிவை செயலற்றதாக்கி சர்வாதிகார ஆட்சியை கொணர பாதை போடும் என்று எச்சரித்தார்.
அரசியலில் ஹிரோக்களை போற்றலாம் ஆனால்பூசிக்க கூடாது என்றார் ” மதத்தில் பக்தி ஒருவரை பாவங்களிலில்லிருந்து விடுபட வழிகாட்டும். ஆனால் அரசியலில் நாயகர் வழிபாடு சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் என்றார்.
மேலும் “அரசியல்நிர்ணயசட்டம் கூறும் தர்ம உணர்வு இயற்கையாக மக்கள் மனதில் உருவாகாது, அது மக்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்றார்.
மார்க்சியவாதிகளும் அதையே கூறுகின்றனர் நாயகர் வழிபாடு மக்கள் மனதில் வரலாறு ஏற்றிவைத்திருக்கும் சுமை ஆகும் சித்தாந்த போரில் மக்களை ஈடுபடுத்துவதின் மூலமே மக்கள் அந்த சுமையை மக்கள் இறக்கிவைத்து சட்ட ஆட்சி தர்மத்தை பேணுவர் ஹிரோக்கள் சர்வாதிகாரியாக ஆவதை தடுப்பர்.
நாயகர் வழிபாடு மானுடத்தின் இயல்பு அதற்கு எதிராக பேசுவது சிரமம் என்று ஒருவர் கருதினால் அவரது உயிர் மட்டுமல்ல மக்களின் உயிர்களும் காஷ்மீர் மக்களின் உயிர் மோடிகைக்கு போனது போல ஒரு நாயகர்களின் கைக்கு போவதை தடுக்க இயலாது !.