facebook-round

img

சென்னை மாநகர காவல்துறை சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்!

சென்னை மாநகர காவல்துறை Chennai City Police சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்!

சென்னை மாநகர காவல்துறை நேற்று ட்விட்டர் மூலமாக தாங்கள் ஒரு நபரைவிசாரித்தது விடுவித்ததுகுறித்த விபரங்களை விவரித்துள்ளதோடு பொய்யான செய்திகள் தவறான செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து சரியானது வரவேற்கத்தக்கது.

காவல்துறையின் கவலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்தான விமர்சனத்திற்கு அடிப்படையே இல்லையா?

2016 ஆம் ஆண்டு முதல் பெண் பத்திரிக்கையாளர்கள் பலபேர் கடைசியாக 22 7 2020 வரை சமூக வலைத்தளத்தில் அந்த குறிப்பிட்ட நபர்தங்களை ஆபாசமாக சித்தரிப்பது குறித்து புகார்களை அளித்திருக்கிறார்கள்.

இத்தனை புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும் காவல்துறை சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை .சம்பந்தப்பட்ட நபர் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விடுகிறார். அது பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான சவால் மட்டுமல்ல; காவல்துறைக்கு எதிரான சவால் மட்டுமல்ல; சட்டத்திற்கு எதிரான சவால். ஆனால் காவல்துறைகண்டுகொள்ளவே இல்லை என்கிற வருத்தம் அந்தப் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமின்றி இந்த நிகழ்வுகளை கவனித்து கொண்டிருக்கிற அனைவருக்கும் ஏற்படுவது இயல்பு தானே.

இரண்டாவதாக முன்பெல்லாம் ஏதாவது ஒருவர் தவறு செய்தால் ஊடகங்களில் வெளிப்படுத்துவோம் என்று சொல்வது வழக்கம். ஆனால் சமீபகாலத்தில் நியூஸ்18 News18 Tamil Nadu : நிர்வாகத்தின் சார்பாகவும் புதிய தலைமுறை புதிய தலைமுறை நிர்வாகத்தின் சார்பாகவும் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இதுதவிர குறிப்பிட்ட நபரை கைது செய்தோம்அல்லது காவல் நிலையத்திற்கு வரவழைத்தோம்,செல்போனை வாங்கிக் கொண்டோம்,தேவைப்படும்போது வரவேண்டுமென்று எழுதிக் கொடுத்து விட்டு போகச் சொல்லிவிட்டோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் பாஜகவின் தேசிய செயலாளராக இருக்கக்கூடிய திரு. எச் ராஜா சம்பந்தப்பட்ட நபரை விடுவிக்க உதவிய உடனிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் ட்வீட் வெளியிட்டிருக்கிறார்.

இதை கவனித்துப் பார்க்கிற யாருக்கும் சென்னை காவல் மாநகர காவல் துறையின் அந்த ட்வீட்டை நம்புவதற்கு கடினமாக இருக்கும் என்பதை காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாகபெண்களை அவமானப்படுத்துகிற,சிறுமைப்படுத்துகிற அவதூறு செய்திகளின் மீது எந்தவிதமான தாமதமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

சம்பந்தப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்கள் அவர்களது நண்பர்கள் என்ற பலரையும் பாதிக்கிற விசயம் இதுஇதில் மாநகர காவல்துறை உரிய காலத்தில் தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

Kanagaraj Karuppaiah