கொரோனா நுரையீரலைத் தாக்கி அறிகுறிகளே இல்லாமல் திடீரென மூச்சுத் திணறலை உண்டாக்கும். பொதுவாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95 % த்துக்குக் குறைந்தாலே மூச்சு முட்டும். ஆனால் கொரோனாவில் ஆக்ஸிஜன் அளவு 80-85% எனக் குறையும் வரை எந்த அறிகுறியும் இல்லை. சிலருக்கு 70-75% சதவிகிதம் வரை குறைந்தாலும் எந்த அறிகுறியும் தெரிவதில்லை. இதை ஹேப்பி ஹைபாக்ஸியா என்கிறோம். Happy hypoxia. இது கொரோனா ஆரம்பித்த நான்கைந்து நாட்களுக்குப் பின்னரே நடைபெறுகிறது.
உங்களுக்கு கொரொனா பாஸிட்டிவ் என வீட்டிலேயே இருக்கிறீர்களோ, அல்லது மருத்துவமனையில் இருக்கிறீர்களோ, உங்கள் வீட்டில் யாருக்கேனும் பாஸிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறதோ, உங்களுக்குக் காய்ச்சல், தொண்டை வலி இருந்து கொரோனாவாக இருக்குமோ என நினைத்தாலோ,
காய்ச்சல் சரியாகிவிட்டாலும் அடுத்த சில நாட்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்னும் கருவியில் ஆக்ஸிஜன் அளவை அடிக்கடி பார்க்க வேண்டும் 95% க்குக் குறைவாக இருந்தால் கவனம். 90% க்கும் கீழ் என்றால் உடனே மருத்துவமனைக்குச் செல்லவும்.
இப்படி பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக் கொண்டு பரிசோதிக்க முடியாதவர்கள் ஐந்து நிமிடம் நீங்கள் வழக்கமாக நடக்கும் வேகத்தில் நிற்காமல் நடக்கவும். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக் கொள்ளவும்.
கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் பல தாமதமாக வருவதாலேயே ஏற்படுகின்றன. காய்ச்சல் இருக்கும்போது பயத்தினால் டெஸ்ட் செய்யாமல் தாமதித்துப் பின்னர் மருத்துவமனைக்கு லேட்டாக வருபவர்களே பெரிதும் பலியாகின்றனர்.
- டாக்டர் ராமானுஜம்