facebook-round

img

அண்ணன் பேர் பகவான் தம்பி பேரு அல்லா அக்பர்...!

"என்னுடைய பேரு

ஆண்டவர், என்னுடைய

அண்ணன் பேரு பகவான்,

என் தம்பி பேரு கடவுள்..

இப்படியெல்லாம் தான்

எங்க அப்பா எங்களுக்கு

பேரு வெச்சாரு தோழர்..

எங்க அப்பாவுக்கு

ரொம்ப நெருக்கமான

நண்பரா ஒரு முஸ்லீம்

இருந்ததால என்னுடைய

இன்னொரு தம்பிக்கு

அல்லா அக்பர் னு பேரு

வெச்சிட்டாரு எங்க அப்பா..

அவரு பக்தியால எல்லாம்

வைக்கல. அவரு பேரு

முத்துசாமி.. ஆனா எல்லாருமே

முத்தன் பறையன்னு தான்

கூப்பிடுவாங்க... அதனால

என் புள்ளைங்களை அப்படி யாரும்

சொல்லக் கூடாதுன்னு தான்

இப்படியெல்லாம் பேரை வெச்சாரு.."

தனது நிலத்தில் விளைந்த

கடலையை சூடாக வறுத்து

கூடவே வெல்லத்தையும் தந்து

எங்களை உபசரித்துக் கொண்டே

பேசிய அந்த எளிய குடும்பத்தை

பார்த்து வியந்து தான் போனோம்..

கிளம்ப ஆயத்தமான போது ஓலை

வேய்ந்த வீட்டுக்குள் அவசரமாக

ஓடிச் சென்று எடுத்து வந்த சில

கசங்கிய ரூபாய் தாள்களை

எங்கள் கைகளில் அளித்து

விட்டு சொன்னார்கள்.

"நம்ம கட்சி ஆபிசை கட்டிட்டு

இருக்கோம்னு தம்பி சொல்லுச்சு,

அதான் நிதி குடுக்கலாம் னு.."

அவர்களிடம் அப்போது

சொல்வதற்கு வார்த்தைகள்

ஏதும் வரவில்லை.. ஆனால்

மனதில் எழுந்தது..

ஊற்றெடுக்கும் உணர்வுகளோடு

கட்சியை தாங்கி பிடிக்கும்

எளிய தோழர்களே எப்போதும்

ஆதர்சமான முன்னத்தி ஏர்கள்..

நாம் வெல்வோம்..!!!

#சிபிஐ_எம்

#திருவண்ணாமலை..