facebook-round

img

தலை முதல் பாதம்வரை வெட்டுப்படாத இடமே இல்லை... எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறது பொதுச் சமூகம்!

தலை முதல் பாதம்வரை உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை...

இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப் பட்டுள்ளன..

சினிமாவில் வரும் "சைக்கோ' - போன்றவர்களால் தான் இது போன்றகொடூரத்தை செய்ய முடியும்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

 

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவன் சின்னதுரையையும்..

அவனது தங்கையையும் இரவு10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது ஒரு சாதி வெறி பிடித்த சிறார் குழு.

படிப்பில்... விளையாட்டில்... ஒழுக்கத்தில்... திறமையில்... அப் பள்ளியில் முன்னுதாரணமாக விளங்கியுளான். சின்னத்துரை.

இவரைப் போல இருங்க என ஆசிரியர்கள் பாராட்டியுள்ளார்.

 

இவனெல்லாம் நமக்கு மேலயா?

பெருந்தெரு சாதிப் பய... !

எங்க பேக்க தூக்கிட்டு வா

பான்பராக் வாங்கிட்டு வா

பேனா, பேப்பர் வாங்கிட்டு வா...

மிரட்டல் அடி உதை என பல நாட்களாக .

டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.

 

அம்மா சத்துணவு பணியாளர்.

அப்பா வேறு மணம் செய்து பிரிந்து வாழ்கிறார்.

தாத்தா வீட்டில் தான் இவனும் அம்மா, தங்கையும் வசித்து வந்துள்ளனர்.

 

நமக்கு எதற்கு வம்பு...

இனி நான் ஸ்கூலுக்கு போகல என

அம்மா விடம் சொல்லி அழுதிருக்கிறான்

சின்னத்துரை.

 

அம்மாவும். தாத்தாவும் பள்ளிக்கு சென்று

புகார் அளித்திருக்கிறார்கள்.

எங்க மேலேயே கம்ளைன்ட் குடுப்பியா...

இங்க தான நீ வாழனும் .

சின்னத்துரை யையும் வெட்டி விட்டு அருகில் படுத்திருந்த தங்கையையும்

வெட்டி சாய்த்துள்ளனர்.

 

சம்பவத்தை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

 

காவல்துறை வழக்கு பதிந்து தனது கடமையை செய்துள்ளது.

பொதுச் சமூகம் எதுவும் நடக்காதது போல

கடந்து செல்கிறது.

 

- ஸ்ரீராம்

நெல்லை மாவட்டச் செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)