election-2019

img

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டு, ஏப்.3-


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி மற்றும்திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில்திமுக சார்பில் க.செல்வம்மற்றும் எல்.இதயவர்மன்ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு வாக்கு சேகரித்து மார்க்சிஸ்ட்கம்யூட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மாவட்டம் முழுவதும் வீடுவீடாக சென்று உற்சாகத்துடன் வாக்கு கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் புதனன்று(ஏ.3) திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருமணி, ஒத்திவாக்கம், மணப்பாக்கம், பி.வி.களத்தூர், சாலூர்,மாம்பாக்கம், அம்மணம்பாக்கம், கரும்பாக்கம், நாவலூர் நரப்பாக்கம், ஈச்சங்கரணை, முள்ளிகொளத்தூர், நத்தம்கரியச்சேரி, நல்லூர், நெய்குப்பி,மணமை, கடம்பாடி, குழிப்பாந்தண்டலம்,கொத்திமங்களம், அழகு சமுத்திரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் மக்களவை வேட்பாளர் செல்வம், சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் வாக்கு கேட்டனர்.அப்போது அவர்களுக்கு கிராமத்தில் உள்ள பெண்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, சிபிஎம்மாவட்டச் செயலாளர் இ.சங்கர், திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் குமார், வட்டக்குழு உறுப்பினர்கள் அழகேசன், டி.கோவிந்தன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;