election-2019

img

சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பாஜக மீது காவல்துறையில் புகார்

மதுரை, ஏப்.3-


தமிழக பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.ஆர்.சீனிவாசனின் பேச்சு, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இந்தியதண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக் குரிய குற்றமாகும். அவதூறு, வன்மம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வன்முறையைத் தூண்டுதல், தேர்தலை சீர்குலைத்தல் ஆகிய நோக்கத்தோடு பேசியுள்ளார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார்தெரிவித்துள்ளார்.மேலும் ஆர்.சீனிவாசன், வேட்பாளர் சு.வெங்கடேசன் குறித்து அவதூறகப் பேசியகாணொலிக் காட்சியின் குறுந்தகட்டையும் வழங்கியுள்ளார்.

;