election-2019

img

மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம்

திருவாரூர், ஏப்.4-திருவாரூர் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாகவும், கடைவீதிகளிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.கொடிக்கால்பாளையம், கேக்கரை, வடக்குவீதி, மேட்டுத்தெரு, மானந்தியார் தெரு, சன்னதி தெரு, பிடாரி கோவில்தெரு, தெற்குவீதி, நேதாஜிசாலை, மருதம்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்குசேகரிப்பு பணியில் திமுக நகரச் செயலாளர் வாரை.பிரகாஷ், நிர்வாகிகள் த.செந்தில், எஸ்.என்.அசோகன், இரா.சங்கர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராமசாமி, நகரச் செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், மூத்த உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன், சிபிஐ மாரியப்பன், செல்வம், செல்லமணி, சின்னத்தம்பி, காங்கிரஸ் நகர தலைவர் மடப்புரம் எம்.சம்பத், உறுப்பினர் மாரியப் பன், ஆரூர்.சீனிவாசன்(மதிமுக), மனோகரன் (விசிக) மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திரளான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூண்டி.கே.கலைவாணன் (திமுக) ஆகியோருக்கு ஆதரவாக திருவாரூர் நகரில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

;