election-2019

தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்கசளில் மோசடி செய்யவில்லை எனில் பாஜக மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம்-அஸ்ஸாம் முன்னாள் முதல்வர்

புதுதில்லி, மே 10-

உத்தரப்பிரதேசத்திலும் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்களில் தில்லுமுல்லு எதுவும் செய்யாமல் பாஜக வெல்வது கடினம் என்றும், எனவேதான் எதிர்க்கட்சிகள் தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்களில் பாஜக தில்லுமுல்லு செய்வதில் ஈடுபடுமோ என்று எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் கூறினார்.

தருண் கோகோய் மேலும் கூறுகையில் எதிர்க்கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றிடும் என்றும், எதிர்க்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து பாஜக அல்லாத அரசாங்கத்தை மத்தியில் அமைத்திடும் என்றும் கூறினார்.