election-2019

img

நான் இனி உங்களுடன் எப்போது பேச முடியும் என்று தெரியவில்லை!

இந்திய மக்களுக்கு ஆனந்த் டெல்டும்டே திறந்த மடல்

தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர். மாபெரும் மனித உரிமை போராளி. அண்ணல் அம்பேத்கரின் பேத்தியின் கணவர் இவர். 2018 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நடத்திய கொடிய வன்முறை தொடர்பான வழக்குகளில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா உள்ளிட்ட அறிஞர்கள் மீது மகாராஷ்டிரா காவல்துறை பொய் வழக்கு புனைந்து, சோதனைகள் நடத்தி, ஒரு கட்டத்தில் இவர்கள் மீது ‘மாவோயிஸ்ட்’ என முத்திரை குத்தி, தேசிய புலனாய்வு முகமை மூலமாக பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது வாரண்ட் பிறப்பித்தது. 

பலர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆனந்த் டெல்டும்டே முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ஏப்ரல் 14 அன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முன்பு சரணடைய முடிவானது. ஏப்ரல் 14, அரசியல் சட்ட மேதை அம்பேத்ரின் பிறந்த நாள் அன்றைய தினம், அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியாளர்கள் புனைந்த பொய் வழக்கை அம்பேத்கரின் பேரனே சரணடைந்த துயரமான சம்பவம், நாடு முழுவதும் மனித உரிமை போராளிகள் மத்தியிலும், இடதுசாரிகள், தலித் இயக்கங்கள் மத்தியிலும் கொதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் டெல்டும்டேயை கைது செய்யாதீர், அவர் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெறுவீர் என்ற பல்வேறு இயக்கங்களின் முழக்கம் மோடி அரசின் காதுகளை எட்டவில்லை. ஏப்ரல் 14 செவ்வாயன்று மாலை சுமார் 3 மணியளவில் மும்பையில் ஆனந்த் டெல்டும்டேவும், தில்லியில் கவுதம் நவ்லகாவும்  சரணடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக ஆனந்த் டெல்டும்டே எழுதிய உருக்கமான கடிதத்தின் சில பகுதிகள் இங்கே!

பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் அடிபணிந்த ஊட கங்களின் ஒருங்கிணைந்த கூச்சலில் இது முற்றிலும் மூழ்கிவிடக்கூடும் என்பதை நான் அறி வேன், ஆனால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாததால் உங்களுடன் பேசுவது மதிப்புக்குரியது என்று நான் இன்னும் நினைக்கிறேன். ஆகஸ்ட் 2018 முதல் - கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் ஆசிரிய வீட்டுவசதி வளாகத்தில் உள்ள எனது வீட்டை போலீசார் சோதனை செய்ததிலி ருந்து- எனது உலகம் முற்றிலும் தலைகீழாக மாறியது. என்னுடைய மிகமோசமான கனவில் கூட, எனக்கு நடக்கத் தொடங்கிய விஷயங்களை, கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

என் சொற்பொழிவுகளின் அமைப்பாளர்களை, பெரும்பாலும் பல்கலைக் கழகங்களை காவல்துறை யினர் கண்காணிப்பதையும், என்னைப் பற்றிய விசா ரணைகள் மூலம் அவர்களை பயமுறுத்துவதையும் நான் அறிந்திருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்திலிருந்து வெளியேறிய என் சகோதரருக்கு பதிலாக அவர்கள் என்னை தவறாக நினைப்பதாக நினைத்தேன். ஐ.ஐ.டி கோரக்பூரில் நான் பாடம் கற்பித்த போது, பி.எஸ்.என்.எல் அதிகாரி ஒருவர் போன் செய்தார், தன்னை என் அபிமானி மற்றும் நலம் விரும்பி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக எனக்குத் தெரிவித்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன், ஆனால் எதுவும் செய்யவில்லை, என் சிம் கார்டை கூட மாற்றவில்லை. இந்த ஊடுருவல்களால் நான் கலக்கம் அடைந்தேன், ஆனால் நான் ஒரு சாதாரண மனிதர் என்றும், எனது நடத்தையில் சட்டவிரோதத்தின் எந்தக் கூறுகளும் இல்லை என்றும் போலீஸை நம்பவைக்கக்கூடும் என்று எனக்கு ஆறுதல் கூறிக்கொண்டேன். காவல்துறை யினர் பொதுவாக சிவில் உரிமை ஆர்வலர்களை விரும்பு வதில்லை, ஏனெனில் அவர்கள் காவல்துறையை கேள்வி கேட்கிறார்கள். நான் சிவில் உரிமை ஆர்வ லர்களை சேர்ந்தவன் என்பதன் காரணமாக இருக்க லாம் என்பதாக கற்பனை செய்தேன். ஆனால் எனது வேலையில் முழுநேர ஈடுபாடு இருப்பதால் என்னால் அந்த பாத்திரத்தை முழுமையாக செய்ய முடியவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று மீண்டும் என்னை ஆறுதல்படுத்தினேன்.

ஆனால் எனது நிறுவனத்தின் இயக்குநரிடமிருந்து ஒரு அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்த போது, காவல்துறையினர் வளாகத்தை சோதனையிட்டு என்னைத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரிவித்த போது, நான் சில நொடிகள் வார்த்தைகளின்றி இருந்தேன். நான் சில மணி நேரங்களுக்கு முன்பு உத்தி யோகபூர்வமாக மும்பைக்கு வந்திருந்தேன், என் மனைவி முன்னதாக வந்திருந்தார். அந்த நாளில் சிலர் கைது செய்யப்பட்டதைப் பற்றி நான் அறிந்தபோது, அந்த நாளில் சில வீடுகள் சோதனை செய்யப்பட்டதைப் பற்றி நான் அறிந்தபோது, மயிரிழையில் நான் விதியிலிருந்து தப்பித்தேன் என்பதை உணர்ந்தேன். காவல்துறையினர் எனது இருப்பிடத்தை நன்றாக அறிந்திருந்தனர், அப்போது கூட என்னைக் கைது செய்திருக்க முடியும், ஆனால் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக அவ்வாறு செய்யவில்லை. பாதுகாப்புக் காவலரிடமிருந்து ஒரு நகல் சாவியை அவர்கள் வலுக்கட்டாயமாகப் பெற்றனர், அவர்கள் எங்கள் வீட்டையும் திறந்தனர், ஆனால் அதை வீடியோ கிராப் மட்டும் செய்து மீண்டும் பூட்டினர். எங்கள் சோத னையானது அங்கேயே தொடங்கியது.

காவல்துறையினர் ‘மாவோயிஸ்ட் கதை’யுடன் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தத் தொடங்கினர். எனக்கும் கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் எதிராக பகிரங்கமாக தப்பெண்ணத்தைத் தங்களுக்கு கடமைப் பட்ட ஊடகங்களின் உதவியுடன் தூண்டிவிடுவது தெளி வாக நடந்தது.

‘மாயாவி’

இந்த முழு வழக்கிலும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு மறைக்கப்படவில்லை. எனது மராத்தி நண்பர்கள் என்னி டம் சொன்னார்கள், ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்களில் ஒருவரான ரமேஷ் படங்கே, ஏப்ரல் 2015 இல் என்னை குறிவைத்து அவர்களின் ஊதுகுழலான ‘பாஞ்சஜன்யா’ வில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். நான், அருந்ததி ராய் மற்றும் கெயில் ஓம்வேட் ஆகியோர் ‘மாயாவி அம்பேத்கர் வாதி’ என அடையாளம் காணப்பட்டுள்ளோம். இந்து புராணங்களில் ‘மாயாவி’ என்பது அழிக்கப்பட வேண்டிய ஒரு அரக்கனைக் குறிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்தபோது புனே காவல்துறையினரால் நான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டபோது, இந்துத்துவாவின் ‘சைபர்’ கும்பல் எனது விக்கிமீடியா பக்கத்தை அழித்தது. இந்த பக்கம் ஒரு பொதுவான பக்கம், பல ஆண்டுகளாக நான் அதைப் பற்றி கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் முத லில் எல்லா தகவல்களையும் நீக்கிவிட்டு, “அவருக்கு ஒரு மாவோயிஸ்ட் சகோதரர் இருக்கிறார். அவருடைய வீடு சோதனை செய்யப்பட்டது. மாவோயிஸ்டுடனான தொடர்புகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார்” போன்றவற்றை மட்டுமே எழுதினர். சில மாணவர்கள் பின்னர் என்னிடம் சொன்னார்கள், அவர்கள் பக்கத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும்போதோ அல்லது பக்கத்தைத் திருத்துவதற்கோ முயலும்போது அந்தக் கும்பல் மீண்டும் எல்லாவற்றையும் நீக்கி, கேவலமான உள்ளடக்கத்தை வைக்கும். இறுதியில், விக்கிமீடியா தலையிட்டு, அவற்றின் சில எதிர்மறை உள்ளடக்கங்களுடன் பக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

நக்சல் வல்லுநர்கள் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் பிரிவு ஒன்று முழுவதும் தவறான ஊடக தகவல்களின் மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இத்தகைய ஊடகங்களுக்கு எதிரான எனது புகார் களுக்கு, இந்திய ஒலிபரப்பு அமைப்பிடமிருந்து ஒரு எளிய பதில் கூட கிடைக்கவில்லை. அக்டோபர் 2019 இல், என் அலைபேசியில் மிகவும் தீங்கு விளை விக்கும் இஸ்ரேலிய ஸ்பைவேரை அரசாங்கம் செருகி யது என்று தகவல் வெளிவந்தது. ஆனால் நான் ஒரு எளிய மனிதனாக இருந்தேன், எனது தேவைகளுக்கு நேர்மையாக சம்பாதித்து வருகிறேன், எழுத்துக்கள் மூலம் என் அறிவால் முடிந்தவரை மக்களுக்கு உதவு கிறேன். கார்ப்பரேட் உலகில், ஒரு ஆசிரியராக, ஒரு சிவில் உரிமை ஆர்வலர் மற்றும் ஒரு பொது சிந்தனை யாளனாக என பல்வேறு பாத்திரங்களில் இந்த நாட்டிற்கு கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக களங்கமற்ற சேவை செய்த பதிவு என்னிடம் உள்ளது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட 30 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் / கட்டுரைகள் / கருத்துகள் / பத்திகள் / நேர்காணல்கள் அடங்கிய எனது மிகப்பெரிய எழுத்துக்களில், வன்முறைக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு தூண்டுதலையோ அல்லது எந்தவொரு மோசமான இயக்கத்தையோ காண முடியவில்லை.

ஆனால் என் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில், கடுமையான (பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டம் - யுஏபிஏ) UAPAவின் கீழ் நான் குற்றம் சாட்டப்படுகிறேன். என்னைப் போன்ற ஒரு நபர். அரசாங்கத்தின் மற்றும் அதன் அடிபணிந்த ஊடகங்களின் உற்சாகமான பிரச்சாரத்தை எதிர்க்க முடியாது. எந்தவொரு நபரும் இது ஒரு அருவருப்பான குற்றவியல் புனைகதை என்பதைக் காண போதுமான வழக்கின் விவரங்கள் இணையம் முழுவதும் பரவியுள்ளன.

கருத்து வேறுபாடுகளை அழிக்கவும் மக்களை துண்டாடி அணி சேர்க்கவும், தீவிர தேசியமும் தேசியவாதமும் அரசியல் வர்க்கத்தால் ஆயுதமாக ஏந்தப்பட்டுள்ளன. வெகுஜன வெறி யர்கள் மூடத்தனங்கள் மற்றும் அர்த்தங்களை தலைகீழாக்குதல் ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளனர், இங்கு தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும், தன்னலமற்ற சேவகர்கள் தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனது இந்தியா பாழடைந்து வருவதை நான் காணும்போது, இது போன்ற ஒரு மோசமான தருணத்தில் பலவீனமான நம்பிக்கை யுடன் தான் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

நான் இப்போது என்ஐஏ (NIA) காவலில் இருக்கிறேன், நான் இனி உங்களுடன் எப்போது பேச முடியும் என்று தெரிய வில்லை. இருப்பினும், உங்கள் முறை வருவதற்கு முன்பு நீங்கள் பேசுவீர்கள் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன். 

தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி