education

img

உக்ரைனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை ஒன்றிய அரசு மீட்டது.

மேலும்,இந்த மாணவர்களின் மருத்துவபடிப்பு குறித்த எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ஒன்றியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிலையில், உக்ரைன் பல்கலைக்கழகத்தில் இருந்து நாடு திரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவு தேர்வு இல்லாமலும் மாணவர்கள் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் கிரிமியாவில் உள்ள நிறுவனங்கள், உக்ரைனில் இருந்த வெளிநாட்டு மருத்துவ ஆர்வலர்களையும், இந்தியாவை மையமாக கொண்ட ஆலோசகர்களையும் அணுகி தங்களது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கும் பணியை தொடங்கியுள்ளன.