சென்னை, ஜூன்.04- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7ம் தேதி தொடங்கி, 27ம் தேதி முடிவடைந்தது. இதில் 1,84,762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி ஆன்லைன் விண்ணப்ப பதிவு முழுமை செய்திருந்தனர்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ஆம் தேதியும் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருந்தது.