South Indian வங்கியில் Probationary Clerks காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Probationary Clerks
காலியிடங்கள்: 385
சம்பளவிகிதம்: ரூ.11,765 - 31,540
வயதுவரம்பு: 30.6.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 1.7.1993 முதல் 30.6.2000 வரையுள்ள இடைப்பட்ட தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு வயதுவரம்பில் 5 வருடம் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.7.2019.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான Call Letter-ஐ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. (SC/ ST பிரிவினருக்கு ரூ.150). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். செலுத்திய உடன் விண்ணப்பக் கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.southindianbank.com என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.6.2019 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.