சென்னை:
சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சியின் செய்திப் பிரிவு பணிக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.இந்திய பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சி நிலைய செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர், செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர், செய்தி வாசிப்பாளர்.விண்ணப்பிக்கும் முறை: http://doordarshan.gov.in/ddpodhigai என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர் (செய்தி), மண்டல செய்திப்பிரிவு, பொதிகை தொலைக் காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம், சென்னை - 600 005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2020
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் போன்ற முழுமையான விவரங்களை அறியhttp://doordarshan.gov.in/ddpodhigai என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.