economics

img

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை

சென்னை, மார்ச் 25 - சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.248 உயர்ந்து  ரூ.38,832-க்கு விற்பனையா கிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.4,854-க்கு  விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.73.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா-  உக்ரைன் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி  முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத்தொடங்கி யது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மார்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது.  இதன் தொடர்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,248-க்கு-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம்  தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,781-க்கு விற்பனை செய்யப் பட்டது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனையானது.   இந்நிலையில், வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,832 -க்கு விற்பனை செய்யப் பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 அதிகரித்து, ரூ.4,854-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.1 காசுகள் அதிகரித்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.73,800 ஆக விற்பனை செய்யப்பட்டது.