economics

img

ஜிஎஸ்டி வரி விகிதங்களை உயர்த்துகிறது மோடி அரசு?

புதுதில்லி, ஏப்.18- நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை யை கொண்டு வரும் நோக்கத்தில் ஜிஎஸ்டி (GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டது. இது கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானங்கள் உள் ளிட்ட பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது. 5,12,18, 28 ஆகிய சதவிகித அளவுகளில் நான்கு அடுக்கு களாக, ஜிஎஸ்டி வரியமைப்பு இருந்தது. தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 3 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மாநிலங்களின் வரி வருவாய் பறிபோகும் சூழல் அன்று எழுந்தது. அப்போது, மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை- அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ‘2022 ஜூன்’ வரை ஒன்றிய அரசே வழங்கும். மாநில அரசுகளின் வரிவருவாயை 14 சதவிகிதமாக பாதுகாக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஜூன்  மாதத்துடன் முடிவடைய உள்ளதால், மாநி லங்கள் ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல், இனிமேல் அவர்களாகவே புதிய வரி வரு வாய் வாய்ப்புக்களை கண்டறிந்து கொள்ள வேண்டும்

என்று மோடி அரசு கூறியுள்ளது. இதற்காக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் முன்னதாகவே குழு ஒன்றை மோடி அரசு அமைத்தது. இந்த  குழு தனது பரிந்துரைகளை அடுத்த மாதத்  துக்குள் இறுதி செய்து ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுஒருபுறமிருக்க, ஜிஎஸ்டி கவுன்சிலா னது, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி யமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. தற்போது 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என 4 அடுக்கு களாக ஜிஎஸ்டி வரியமைப்பு உள்ளது. தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு மட்டும் 3 சதவிகி தம் வரி விதிக்கப்படுகிறது. மேலும் பிராபிட் அல்லாத பொருட்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்படாத உணவு வகைகள் மற்றும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோடி அரசானது, விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களையும் புதிதாக ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக உணவு அல்லாத பொருட்கள் 3 சதவிகித வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சமையல் எண்ணெய், டீ, காபி, சர்க்கரை, நிலக்கரி, இந்திய இனிப்புகள், இன்சுலின் போன்ற உயிர் காக்கும் மருந்துகள், நடக்க உதவும் குச்சிகள், உபரி எரிபொருள், அகர் பத்திகள், முந்திரி பருப்பு ஆகியவை 5 சதவிகித வரி வசூலிப்பில் உள்ள பொருட்கள் ஆகும். இவற்றில் சில பொருட்கள் 3 சதவிகிதத்திற்கோ அல்லது 8 முதல் 9 சதவிகிதம் வரையிலான அடுக்  கிற்கோ மாற்றப்பட உள்ளது. 5 சதவிகிதப் பிரிவில் இருக்கும் பொருட்கள் மற்றும் சேவை கள் எத்தனை சதவிகிதம் 3 சதவிகிதத்திற்கும், எத்தனை சதவிகிதம் 9 சதவிகிதத்திற்கும் மாற்றப்படுகிறது என்பதைப் பொறுத்து, மக்கள் ஏற்கெனவே படும் சிரமம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 3 சதவிகித வரி அடுக்கில் இருக்  கும் 20 முதல் 30 சதவிகித பொருட்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 80 முதல் 70 சத விகித பொருட்களை 8 சதவிகித வரி அடுக்கிற் குள் கொண்டுசென்றால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்வார்கள்.  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியமைச்சர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகே, இந்த வரி அடுக்கு மாற்றும் குறித்து, ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவெடுக்கும் என்றாலும், எப்படிப் பார்த்தாலும், மக்கள் முன்பை விட கூடுதல் வரியை செலுத்தப் போவது மட்டும் இப்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.