economics

img

செப்டம்பரில் ஜி.எஸ்.டி வசூல் 6.5% உயர்வு!

இந்தியாவில், செப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 6.5% அதிகரித்து ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி ரூ.163 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த மாதம், உள்நாட்டு வருவாய் 5.9 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.27 லட்சம் கோடியாக இருந்தது. பொருட்கள் இறக்குமதி மூலம் வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,390 கோடியாக உள்ளது.