நாடு முழுவதும் பெட்ரோல், டீசல்,சமையல் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது சுங்க கட்டணத்தையும் அதிரடியாக மோடி அரசு உயர்த்தி உள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல்கள் காரணமாக சுமார் 3 மாதங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் நிலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.106 யை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை உயர்த்த உள்ளதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 1ம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.45 முதல் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 8 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி, பஞ்சாப்பில் பாட்டியாலா மற்றும் சங்ரூர் சுங்கச்சாவடிகளில் தற்போதைய கட்டணத்தை விட 10 முதல் 18 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபயாம் உள்ளது.