districts

img

வேன் மீது லாரி மோதல் அதிமுகவினர் 2 பேர் பலி

மதுராந்தகம், ஜூலை 11- செங்கல்பட்டு மாவட்டம் மேல்மரு வத்தூர் அருகே திருச்சி - தேசிய நெடுஞ் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.   சென்னை, வானகரத்தில் நடை பெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தை சேர்ந்த 15- க்கும் மேற்பட்ட அ.தி.முக. தொண்டர்கள் திங்க ளன்று காலை வேன் மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த னர். மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப் பாக்கம் அருகே உள்ள இரட்டை ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்திசையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த ஆம்னி பேருந்து மோதியது. அந்த வேகத்தில் லாரியும், ஆம்னி பேருந்தும் சேர்ந்து அவ்வழியே வந்து கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களின் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம் சாலவேட்டை சேர்ந்த அண்ணா மலை (வயது 34 ) அ.தி.மு.க. பிரமுகர் பர சுராமன் (40) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதேபோல் லாரியின் ஓட்டுநர் உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.  தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்தவமனையில் சேர்க்கப் பட்டனர்.  வாகன ஓட்டுநர் அண்ணாமலை, அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் ஆகிய இரு வரும் மேல் சிகிச்சைக்காக செங்கல் பட்டு அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் இரு வரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயி ரிழந்தனர். இந்த விபத்தால் மேல் மரு வத்தூர் அருகே திருச்சி - தேசிய நெடுஞ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.