செய்யூர், மே 9 - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு அருகே உள்ள பத்மா கெமிக்கல் உப்பளத் தொழிற்சாலையில்ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை வழங்க வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் திங்களன்று (மே 9) மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆலை நிர்வாகத்தில் இருக்கும் போலியான ஒப்பந்ததாரர்களையும் குண்டர்களையும் வெளியேற்றிவிட்டு அரசு ஆணைப்படி உப்பளத் தொழிலாளர்களுக்கு நேரடியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெண்ணங்குபட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.