செங்கல்பட்டு,அக்.5- காஞ்சிபுரம் மாவட்டத் தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு புதிய மாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. செங்கல்பட்டு புதிய மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவல கம் கட்டுவதற்கு வேண் பாக்கத்தில் 2021 ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப் பட்டது. ரூ. 12 கோடியே 28 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணி களை தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி சைலேந் திரபாபு ஆய்வு மேற் கொண்டார். அப்போது, 60 விழுக்காடு பணிகள் முடிவடிந்துள்ள நிலையில், மற்ற பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத் தினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வரைபடத்தை டிஜிபி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “கட்டு மானப் பணிகள் அனைத்து வருகிற 2023 ஜனவரி மாத இறுதிக்குள் முடிவடைந்து திறப்பதற்கான ஏற்படுகளை முடக்கிவிட்டிருக்கிறோம்” என்றார் இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல்நிலையம் மதுராந்தகம் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களையும்டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஐ.ஜி தேன்மொழி, காஞ்சி புரம் சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர், டிஎஸ்பி பரத், காவல் ஆய்வாளர்கள் வடிவேல்முருகன், அசோ கன் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.