districts

பரனூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்றுக: சிபிஎம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜூன் 20- காலாவதியான பரனூர் சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட குழு வல யுறுத்தியுள்ளது.  இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலர் ப.சு.பாரதி அண்ணா எடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் தெரி வித்திருப்பதாவது  செங்கல்பட்டு நகருக்கு அருகில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச் சாவடி 2019ம் ஆண்டுடன் காலவதியாகிவிட்டது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விதி முறைக்கு மாறாக செயல்படும் சுங்கச் சாவடி களை நீக்கக் கோரி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பரனூர் சுங்கச் சாவடியும் இடம் பெற்றுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக, மத்திய தணிக்கை அறிக்கை 2023 ல் பரனூர் சுங்கச் சாவடி சட்டத்தை மீறி கூடுதலாக ரூ.28 கோடி வசூ லிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய சட்டத்திற்கு புறம்பாக செயல்படும், காலாவதியான பரனூர் சுங்கச் சாவடியை ஒன்றிய அரசு மூட வலியுறுத்தி தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், செங்கல்பட்டு மாவட்டக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.   தலித் மக்களுக்கு பட்டா  மேலும் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், நெ.64.நடுவக்கரை கிராமத்தில் வசித்து வந்த 30 தலித் குடும்பங்களுக்கு தலா 30 ஏர்ஸ் (74 சென்ட்) வீதம் 22 ஏக்கர் நிபந்தனை பட்டா 1980ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

மேற்படி நிலம் இன்னமும் அடங்கலில் ஏற்றப்படாமல் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் சட்டத்திற்கு புறம்பாக சில தனிநபர்க ளின் பெயரில் பெயர் மாற்றம் நடை பெற்றுள்ளது. சட்டத்துக்கு புறம்பான சில ஆவணங்களை வைத்துக்கொண்டு ஆக்கிர மிக்க முயற்சிக்கிறார்கள். இதோடு, அரசும் இவ்விடத்தை வேறு சிலருக்கு பட்டா வழங்க முயற்சித்து வருகிறது. இது குறித்து வட்டாட்சியர், மாவட்ட ஆட்சி யர் ஆகியோரிடம் மனு கொடுத்து பேசப்பட்டுள்ளது.  

மேலும், 08.11.2023 அன்று நடுவக்கரை கிராம மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை அடங்கல் கணக்கில் ஏற்றிட வும். வேறு சிலருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு மாறாக அதே பயனாளி களுக்கு வழங்கக் கோரியும் ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடை பெற்றுள்ளது. போராட்டத்தின் இறுதி யில் வட்டாட்சியரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இரண்டு மாத கால அவ காசம் கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

7 மாத காலமாகியும் வட்டாட்சியர் இதன்மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர்  இப்பிரச்சனை யில் உடனடியாக தலையிட்டுபாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை அடங்களில் ஏற்றி உரிமையை நிலைநாட்ட வேண்டுமாய் மாவட்டக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.