districts

img

பணிச்சுமையை குறைக்ககோரி நிலஅளவை ஊழியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு, மார்ச் 23 – நில அளவை பணியாளர்களின் களப்பணி  சுமையை குறைத்திட வலியுறுத்தி  புதனன்று (மார்ச் 23) முதல் மூன்று நாள்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிலஅளவர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும், களப்பணி யாளர்கள், வரைவாளர்கள், அமைச்சுப் பணி யாளர்கள் ஒருங்கிணைக்கும் முன்மொழிவு கள் கைவிடப்படும் என்று எழுத்துப்பூர் வமாக கொடுத்த வாக்குறுதியை உத்தர வாதப்படுத்த வேண்டும், நிலுவை மனுக் களை காரணம் காட்டி மாவட்ட மாறுதல் களையும், ஒழுங்கு நடவடிக்கையையும் கைவிட வேண்டும், இயக்ககத்தால் நிறுத்தப்பட்டுள்ள எப்டிஏ வை உடனடியாக விடுவிக்கவேண்டும், உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்தப் போராட்ட விளக்க ஆர்ப்பாட்டம்,  நிர்வாகி லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. கோரிக் கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் அ.பேபி, மாவட்டச் செயலாளர் பிரபு, அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் விக்டர்சுரேஷ்,  மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்தன்,  அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், நகராட்சி மாநகராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு முன்னாள் மாநில பொதுச் செயலாளர் வி.கணபதி பேசினார்.