செங்கல்பட்டு. மார்.8- பிரதமர் விவசாயிகள் ஆதரவு நிதி திட்டத்திற்கு விவசாயிகள் இ-கேஒய்சி அவசியம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது. செங்கல்பட்டு மாவட்டத் தில் ரதமர் விவசாயிகள் ஆதரவு நிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் ஏப்ரல் 2022 முதல் வருகின்ற வருங் கால தவணையை பெறுவதற்கு விவசாயிகள் அனைவரும் இ-கேஒய்சி (Electronic Know Your Customer) கட்டாயம் செய்திருக்க வேண்டும் என ஒன்றிய அரசாங்கம் தெரி வித்துள்ளது. இ.கேஒய்சி யானது ஆதார் அங்கீகார த்தை பொறுத்து இருவழியில் செய்திடலாம். துறையின் இணைய தளம் pmkisan.gov.in பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து அங்கீகாரம் செய்ய லாம். அல்லது பயனாளிகள் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகி ரூபாய் 15 செலுத்தி தங்களின் கை விரல் ரேகையை கொண்டு தங்களின் ஆதார் எண்ணை இணைத்து அங்கீகாரம் செய்திடலாம் உடனடியாக விவசாயிகள் இ-கேஒய்சி செய்து தொடர்ந்து ரதமர் விவசாயிகள் ஆதரவு நிதியினை பெற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.