செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் `ஹீரோ மோட்டார்ஸ் இணைந்து 55000 மரக்கன்றுகளை நடும் பணியினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர்ஆ.ர.ராகுல் நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.