districts

img

சிறுதாவூரில் தலித் மக்களுக்கான 53 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்

செங்கல்பட்டு, பிப்.15- சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை மீட்டு பயனாளிகள் மற்றும்  அவர்களின் வாரி சுகளுக்கு  நிலத்தை பிரித்து வழங்கிட வேண்டும் என  மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

இவர்களுக்கான  நிலங்கள் பறிக்கப் பட்டதை எதிர்த்து நிலமிழந்த மக்க ளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அன்றைய மாநில செயலாளர் என்.வரதராஜன் தலைமை யில் போராட்டங்கள் நடைபெற்றன.  இதையடுத்து அன்றைய  முதலமைச்சர் கருணாநிதி 2007ஆம் ஆண்டு  நீதி யரசர் கே. பி.சிவசுப்பிரமணியம் விசா ரணை ஆணையம் அமைத்தார்.

மேற்படி விசாரணை ஆணை யம் சாட்சியங்களையும் ஆவணங்க ளையும் விசாரணை செய்து விவசாயி களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் இந்த நிலங்களுக்கு அரு காமையில் உள்ள சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப் பட்டுள்ள 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்க ளையும் அரசு கையகப்படுத்திட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தது.

  விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து பரணி ரிசார்ட்ஸ் இயக்குநர்களில் ஒருவரான சித்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு  தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில்  தமிழக அரசு உடன டியாக நிலமிழந்த  சிறுதாவூர் கிரா மத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் அவர்க ளின் வாரிசுகளுக்கு நிலத்தைப் பிரித்து  வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (பிப். 15) செங்கல்பட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம்  நடை பெற்றது.

கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பகத் சிங்தாஸ், திருப்போரூர் வட்டச் செய லாளர் எம்.செல்வம்,  விவசாயிகள் சங்க த்தின் மாநில துணைச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டத் தலை வர் வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியிலிருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.