செங்கல்பட்டு, ஏப்.13 – பார்வை மாற்றுத் திறனாளிகளின் வீடுகளில் முன்னறிவிப்பின்றி மின்சாரத்தை துண்டித்து வீட்டை காலிசெய்திட வலி யுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துவரும சமுக விரோதி கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் தாட்சா யிணி, மாவட்டச் செயலாளர் வி.அரிகிருஷ்ணன் ஆகி யோர் வட்டாட்சியரிடம் அளித்துள்ள மனு வருமாறு; செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், இரத்தினமங்கலம் பிஎல்பி லேஅவுட் ஆர்த்தா பகுதி யில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சர்வே எண் 1/6, 1 / 6எ என்ற அரசு புறம்போக்கு நிலத்தில் 6 வீடுகள் கட்டி 9 குடும்பங் கள் கடந்த 5 ஆண்டுகளுக் கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மேலும். சேவா பாரதி தமிழ்நாடு பெயரில் அடல் பிகாரி வாஜ்பாய் மாற்றுத் திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி நிலைய மும் செயல்பட்டு வந்துள் ளது. கடந்த ஏப். 9 அன்று சில சமூக விரோதிகள் துண்டு தலின் பேரில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்து 5 ரீடிங் மீட்டர்களை எடுத்துச் சென்றுள்ளனர். வீடுகளுக்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே பெரிய பள்ளம் வெட்டி தடை ஏற்படுத்தி யுள்ளனர் . வீடுகளை புல்டோ சர் வைத்து இடிக்க முற்பட்ட போது தகவல் அறிந்து எங்க ளது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வழக்கறி ஞர் ப.சு.பாரதிஅண்ணா, நேரில் சென்று தலையிட்ட தன்பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அன்றைய தினமே காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக விரோதிகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் . இப்பிரச்சனை குறித்து சங்கத்தின் நிர்வாகிகள் ஏப்ரல் 11 அன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர் . இப்பிரச்சனையில் வண்டலூர் வட்டாட்சியர் தலையிட்டு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்த மின்சார வாரிய அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்திற்கும் காரணமாக இருந்த அப்பகுதி சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும், மாற்றுத் திறனா ளிகளின் வீடுகளை வரு வாய்த்துறை காலி செய்யும் பட்சத்தில் உரிய வீட்டுமனை மற்றும் வீடுகளை கட்டித் தருவதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.