districts

img

மோடியை சுமக்கும் அதிமுகவுக்கு நல்லபாடம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் குறித்து கே.பாலகிருஷ்ணன் பேட்டி

செங்கல்பட்டு, மார்ச்.4- ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருப்பது மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணிக்குக் கிடைத்தி ருக்கும் மகத்தான வெற்றி என மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் மோடியை அதிமுக சுமந்துக்கொண்டிருப்பதால் ஈரோடு மக்கள் நல்ல பாடம்புகட்டியுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். செங்கல்பட்டில் செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடக்கக் காலத்திலிருந்து இணக்கமான முறையில் ஒருமித்த கருத்தோடு தேர்தல் போராட்டத்தை  நடத்தினோம். எந்தக் கட்சி போட்டியிட வேண்டும் என்ற பிரச்சனை எங்களுக் குள் ஏற்படவில்லை. யார் வேட்பாளர் என்ற பிரச்சனையும் ஏற்படவில்லை. எந்த சின்னம் என்ற குழப்பம் இல்லை. ஒருமித்த கருத்து ஒற்றுமையுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தத் தேர்தலை எதிர்கொண்டதால் மக்களிடம் இந்த கூட்டணி நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவில் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் ஆரம்பம் முதல் குழப்பம்
இதற்கு நேர் மாறாக பாஜக அதிமுக கூட்டணி தொடக்கம் முதலே பல்வேறு விதமான குழப்பங்கள் குளறு படிகளுடன்தான் தேர்தலைத் துவக்கி னர். தேர்தல் அலுவலகத்தில் பேனர் வைப்பதில் கூட இவர்களுக்குள் குழப்பம் இருந்தது. எந்தக் கட்சி போட்டியிடுவது? வேட்பாளர் யார்? என்ற குழப்பத்துடனே இருந்தனர். இதற்கு மேலாக எந்த சின்னம் என்ப தில் குழப்பம் ஏற்பட்டு இறுதி நேரத் தில் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் என்ற முடிவுக்கு வந்தனர். தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த குளறு படிகள், தேர்தல் இறுதிவரை அவர் களுக்கும் ஒருமித்த கருத்து இல்லா மல் தேர்தலை சந்திக்கின்ற நிலை ஏற்பட்டது. பாஜக அதிமுக கூட்டணி யின் தோல்விக்கு இதுவே மிக முக்கிய காரணம்.
திமுக அரசின் செயல்பாடுகள்
கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின் செயல்பாடுகள் இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்பு லமாக அமைந்துள்ளது. சட்ட மன்ற தேர்தல் காலத்தில் திமுக அறி வித்த வாக்குறுதிகளை இன்னும் நிறை வேற்ற வேண்டியுள்ளது உண்மை தான். தமிழக முதல்வர் ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் போது ஏற்கனவே அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி யிருக்கின்றோம். அடுத்து வருகின்ற மாதங்களில் மிக முக்கியமான தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றுவோம் சொன்ன வாக்குறுதிகள் எதையும் கைவிட மாட்டோம் சொல்லாத பல திட்டங்களை நாங்கள் நிறை வேற்றியிருக்கின்றோம் எனப் பல திட்டங்களை பட்டியல் போட்டுக் காட்டி யுள்ளார். இதுவும் கூட மக்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது.
அழிந்துவரும் சிறு - குறு தொழில்கள்
ஈரோடு மாவட்டம் சிறு- குறு தொழில் நிறைந்துள்ள மாவட்டம், மேற்கு மண்டலத்தில் சிறு குறு நிறுவனங்கள், ஜவுளி ஆலைகள், விசைத் தறி, நூற் பாலைகள், பின்னலாடைகள் நிறைந் துள்ள மாவட்டங்கள் மோடி அரசு கடை ப்பிடிக்கின்ற மிக மோசமான பொருளா தார கொள்கைகள் சிறுகுறு தொழில்கள் எல்லாம் அழிந்து பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் மோடி அரசின் பொருளாதார கொள்கை. இதுவரை பஞ்சை அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு நூற்பாலைகளுக்கு வழங்கி வந்தனர். ஆனால் மோடி அரசு உற்பத்தி ஆகக்கூடிய பஞ்சை  கொள்முதல் செய்யாமல் அம்பானிக் ்கும் அதானிக்கும் ஏற்றுமதி செய்து பெரிய பற்றாக்குறையை உருவாக்கி அந்த மாவட்டங்களின் தொழில் வளத்தை எல்லாம் நாசப்படுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் தொழில் முனைவோரும் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் குடும்பங்க ளும் இந்தத் தொழிலை நம்பி உள்ள பலரும் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முறை யில் பாஜக அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணிக்கு அதிகப்படியான வாக்குகளை  அளித்து வெற்றி பெறச் செய்திருக்கின் றனர்.
மோடியை சுமக்கும் அதிமுக
அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டிருந்தால் கூட சற்று கூடுதலாக வாக்குகளைப் பெற்றி ருக்கக்கூடும். அதிமுக மோடியைத் தலையில் சுமந்து சென்றதால் மோடி மீது ஆத்திரமும் கோபமும் கொண் டுள்ள மக்கள் அதிமுகவைக் கோபத்து டன் நிராகரித்துள்ளனர் என்பதை இந்த வாக்கு வித்தியாசம் எடுத்துக் காட்டு கின்றது . இவ்வாறு அவர் கூறினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர் உள்ளிட்டவர்கள் உடனி ருந்தனர்.

;