தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள 13331 ஆசிரியர் பணியிடங்களில் மதிப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் என வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்ப பெற்று தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தர பணியிடத்தில் தமிழக அரசு பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. சீனுவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழக மாநில தலைவர் த.உதயசூரியன், மாநில துணைத்தலைவர் பெ. அலொசியஸ் துரைராஜ், மாநில செயலாளர் ஏ.ஜெயமுருகன், மாநில தலைமையிட செயலாளர் வெங்கடேசன், கல்வி மாவட்ட பொருளாளர் தணிகைவேல் ஆகியோர் பேசினர்.