districts

img

ஈசூர் வல்லிபுரம் தடுப்பணையின் கரைகள் சேதம் சீரமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு, நவ. 13- பாலாற்றில் கட்டப்பட்டுள்ள  ஈசூர் வல்லிபுரம் தடுப்பணையின் கரைகள்  மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவ சாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றில் 10  கிலோ மீட்டருக்கு ஒரு  தடுப்பணை கட்ட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக கடந்த 2018ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஈசூர் வள்ளிபுரம் இடையே பாலாற்றில் ரூபாய் 30.9 கோடியில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.    கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை காலத்தின் போது தடுப்பணை முழுவதும் நிரம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.   இந்நிலையில்  தற்போது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக வல்லிபரம் பகுதியில் தடுப்பணையின் வடக்கு கரை சேதமடைந்துள்ளது. மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் முழுவதும் சிதலமடைந்து காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஏற்பட்டிருந்த மண் அரிப்புகளை சரி செய்யாததால் தற்போது பெய்து வரும் கன மழையால் மேலும்  மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பேராபத்து ஏற்படு வதற்குள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பாதிப்புக் குள்ளான  தடுப்பணையின் கரை பகுதியை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன்,  மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார், செங்கல்பட்டு பகுதிச் செயலாளர் கே.வேலன்  விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர ராஜன்   ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து விச மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,   விவசாயிகள் சங்கத்தின் நீண்ட கால  போராட்டத்தின் விளைவாக இந்த தடுப்பணை கட்டப்பட்டது. மேலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. தடுப்பணையின் உயரத்தை உயர்த்தினால் மேலும் கூடுதலாக நீரை தேக்கி வைக்க முடியும்.இந்நிலையில் தடுப்பணையின் வடக்கு கரை தொடர் மழை யின் காரணமாக மண் அறிப்பு ஏற்பட்டு பலவீனமாக உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழை யினால் ஏற்பட்ட மண் அரிப்பை உடனுக்குடன் சரி செய்தி ருந்தால்  இந்த ஆண்டு மண் அரிப்பு ஏற்பட்டிருக்காது. தடுப்ப ணையின் கரைகள் மேலும் சேத மடையும் முன் மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை தடுப்ப ணையின் கரைகளை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட  வேண்டும் என தெரிவித்தார்.