மாமல்லபுரம்,ஜன.2- செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த ஆயப்பாக்கம் அருகே நத்தம்பகுதி பாலாற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. குறித்து அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா என்பவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி காவ லர்கள் விசாரித்து வந்தனர். இதற்கிடையே, கூவத்தூர் பழைய ஆற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த சாதிக் பாஷாவை வழிமறித்த வாலிபர் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டியுள் ளார். இதில் நல்வாய்ப்பாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசா ரணை செய்ததில் அந்த வாலிபர் பெயர் பிரகாஷ் என்பதும் மணல் கடத்தல் குறித்து காவல்துறையிக்கு தெரிவித்ததால் ஏற்பட்ட மோதலில் கொலை முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரகாசை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல் பட்டு சிறையில் அடைத்த னர்.