கும்பகோணம் ஜூன் 17- கும்பகோணத்தை அடுத்த திருப்பனந் தாள் அருகே மணலூர் ஊராட்சி குமணந் துறையைச் சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் தினேஷ்(32), விவசாயி. இவர், மணலுார் ஊராட்சி திமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று தனது செங்கல் சூளையிலிருந்து பைக்கில் வீட்டிற்கு வரும் போது மறைவான பகுதி யிலிருந்து வந்த தியாகராஜபுரத்தை சேர்ந்த சுந்தர் உட்பட 2 பேர் தினேஷை அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த அவர், கும்ப கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குமணந்துறை காவிரி ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக மினி லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்த போது அங்கு வந்த வருவாய்த்துறையினர் மினி லாரியை பறி முதல் செய்தனர். இந்த தகவலை, தினேஷ் தான் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக நினைத்து தியாகராஜ புரத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் அரிவா ளால் வெட்டியதாக திருப்பனந்தாள் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.