districts

img

செங்கல்பட்டு அருகே விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்வருத்தூர் அருகே இன்று காலை வழக்கம் போல் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தனர். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி, பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தின் படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவர்கள்  4  பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்வப இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் , உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் மோகல்பாடி, ராமாபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும்,  மதுராந்தகம் பகுதியில் உள்ள மாலோலன் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என்றும்  தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.