வேலூர், மார்ச் 9- பெண்களுக்கு உரிமை, மரியாதை வழங்க வேண்டும் என்று விஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் காவல்துறை அதிகாரி தேன்மொழி தெரிவித்தார். வேலூர் விஐடியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவுக்கு மாநில குற்றப் புலனாய் வுத்துறை, காவல்துறையின் தலைவரான தேன்மொழி கலந்து கொண்டு உரையாற்றினார். விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை வகித்தார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் வாழ்த்திப் பேசினார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு காவல்துறை அதிகாரி தேன்மொழி, விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் பரிசுகளை வழங்கினர். கவுரவ விருந்தினர் சிப்லா நிறுவனத்தின் உதவி இயக்குநர் மீனாட்சிசின்கா, விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.