வேலூர். மார்ச் 29 - பீடி மீது விதித்துள்ள 28 விழுக்காடு ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பி.காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சம்மேளன மாநிலத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தும், மாநில பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் நிறைவு செய்தும் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், பீடி சங்க மாவட்டச் செயலாளர் வி.நாகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சி.சரவணன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் ஏ.குப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.