திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் ஆகியோரை ஆதரித்து செவ்வாயன்று மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.