வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்திலுள்ள தொழிற்பயிற்சி மையத்தில் பொதுப்பணித் துறை சார்பில் நடைபெறும் புதிய கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.