வேலூர், டிச. 17- வேலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப் படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் 60 விழுக்காடு நிதி பங்களிப்புடன் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள் ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரை திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி பெற்றவை. இந்த திட்ட தொகையில் 10 விழுக்காடு முதலீட்டாளர் பங்காக செலுத்த வேண்டும். 90 விழுக்காடு வங்கிகளால் பிணையமில்லாத கடன் வழங்கப்படும். அரசு 35 விழுக்காடு மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கும். சுய உதவிக்குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலத னமாக வழங்கப்படும். உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்டத்தொகையில் 35 விழுக்காடு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில்மை யத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.