districts

img

விஐடியில் க.அன்பழகன் நூற்றாண்டு விழா

வேலூர். பிப் -13 தமிழியக்கம் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில்  விஐடி அண்ணா அரங்கில் பேராசி ரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதை யொட்டிய புகைப்படக் கண்காட்சியை விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் பேராசிரியர் அன்பழகன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு திட்டகுழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றியழகன், ப.கார்த்திகேயன் மற்றும் அன்பழகன் குடும்பத்தினர் கலந்து கொண்டு பேசினர். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவ நாதன், ஜி.வி.செல்வம், தமிழியக்க மாநிலச் செயலாளர் மு.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;