districts

img

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

வேலூர், மார்ச் 26 - காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் காட்பாடி ரயில் நிலை யத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் காட்பாடி ரயில் நிலைய சுமை இறக்கும் மையத்தில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டலக்குழு தலை வர் புஷ்பலதா வன்னியராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ரமேஷ் குமார் ஜெயின் வரவேற்றார். கோரமண்டல் பெர்டிலைசர் நிறுவன மண்டல மேலாளர் என். சங்கர், அலுவலர் கோபி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகராட்சியின் 5வது வார்டு உறுப்பினர் சித்ரா மகேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காட்பாடி வட்ட செயலாளர் எல்.நவீன், தலைவர் ஆர்.சுட ரொளியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவர் எஸ்.சரிதா தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.  இந்த முகாமில் ரத்தம், ரத்த அழுத்தம், உடல் பரிசோதனை செய்யப் பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.