வேலூர், நவ.9- வேலூர் சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- வேலூர் சிஎம்சி மருத்துவமனை யில் புதிய கிளை ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் திறக்கப் பட்டு முழுமையாக செயல்பட்டு வரு கிறது. சில சிறப்பு துறைகள் முதன்மையாக ராணிப்பேட்டை வளாகத்திலும் மற்றவை வேலூர் வளாகத்திலும் செயல்படுகின்றன. வேலூர் வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் மிகவும் பழமையான தாகவும் சுண்ணாம்பு சுவர்களை கொண்டதாகவும் உள்ளது. இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் 6 மாத காலத்தில் தொடங்கப்பட உள்ளது. எத்தகைய பிரச்சினை உள்ள நோயாளியும் அவசர உதவிக்கு இந்த இரண்டு வளா கங்களில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை அணுகலாம். வேலூர் வளாகத்தில் இருந்து வழக்கம்போல் அனைத்து பிரிவு களும் செயல்படும். சில நோயாளிகள் சிறப்பு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் எங்க ளுடைய 2 வளாகங்களுக்கு இடையே மாற்றப்படலாம். 2 வளா கங்களிலும் நெஞ்சு வலிக்கான சேவைகள் வழங்கப்படுகிறது. எங்களுடைய இருதய நோய் நிபுணர்களால் வேலூர் நகர வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும். வேலூர் வளாகத்தில் இருந்து அனைத்து துறைகளும் ராணிப்பேட்டை வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்ட தாக வதந்தி பரவுகிறது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தற்போது 13 துறைகள் மட்டுமே ராணிப்பேட்டை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் வேலூர் சிஎம்சி வளாகம் புதிய கட்டிடங்கள் கட்டப் பட்டு உலக தரத்தில் மேம்படுத்தப் பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.