விருதுநகர், பிப்.24- விருதுநகர் மாவட்டம் சிவ காசியை பாரதி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40) இவர் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (30) முத்துமாரி பிரசவத்திற்காக கடந்த புதன்கிழமை காலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். முத்துமாரிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை பெண் குழந்தைஅறுவைச்சிகிச்சை மூலம் இறந்து பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இறந்த குழந்தையின் உடலை பெற்ற உறவினர்கள் இறுதிச் சடங்கை முடித்த நிலை யில் குழந்தை பிறந்ததிலிருந்து முத்துமாரியை உறவினர்கள் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப் படுகிறது இதையடுத்து அவரது பிரச்சனை செய்ததைத் தொடர்ந்து முத்துமாரி இறந்து விட்டதாக மருத்து வர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த முத்துமாரியின் உறவினர் கள் முத்துமாரியின் உடலை உடற்கூராய்வு செய்யக் கூடாது எனக் கூறி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.