districts

img

சாலை விபத்தில் தனிப்பிரிவு காவலர் பலி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தனிப் பிரிவு காவர் உயிரிழந்தார்.

வெம்பக்கோட்டை அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(36). ஆலங்குளம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காலாராக பணிபுரிந்து வந்தார். இவர், தினசரி இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இதேபோல், திங்களன்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குண்டாயிருப்பு அருகே சென்ற போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;