districts

img

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பூங்கா முதல்வர் திறந்து வைத்தார்

அருப்புக்கோட்டை, மார்ச் 7- விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டை அருகே தனியா ருக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் 60 ஏக்கரில் அமைக்கப்பட்ட பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பந்தல்குடியில் தனியார் நிறு வனம், சிமெண்ட் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட் களில் ஒன்றான சுண்ணாம்புக் கல்லை 80 ஏக்கர் பரப்பளவில் எடுக்கத் தொடங்கியது. தற்போது 60 மீட்டர் ஆழம் வரை எடுத்துள் ளது.  இந்நிலையில் அப்பகுதி மக் கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு அச்சுரங் கத்தை அப்படியே கைவிடாமல் புதிய முயற்சியாக ரூ.5.2 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்துள்ளனர். அதன் படி தாவ ரங்கள், விலங்குகளின் பல்லுயிர் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் நீர்நிலை பாதை,  வறண்ட நிலத்தில் வளரும் தாவ ரங்கள், தோட்டம், பந்தல் பூங்கா, புல்வெளி, அழியும் நிலையி லுள்ள தாவரங்கள் மற்றும் 200 வகையான மரங்கள், மூலிகை தாவரங்கள் நட்டு பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதனால், இங்கு ஆயிரக்க ணக்கான பறவைகள், வண் ணத்துப் பூச்சிகள், நுண்ணுயிரி கள் வசிக்க துவங்கியுள்ளன. மேலும், இப்பூங்கா குறுங்காடு போல் காட்சியளிக்கிறது. இந்தநிலையில், இப்பூங்கா விற்கான திறப்பு விழா பந் தல்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை வகித்தார். வரு வாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கலந்துகொண்டு சுற்றுச் சூழல் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சி யில் ராம்கோ குழும தலைவர் வெங்கட்ராம ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;