விருதுநகர், ஜூன் 1- கர்நாடக மாநிலம் பெங்க ளூருவில் ஐக்கிய விவசாய முன்னணித் தலைவர் ராஜேஸ் விகாஸ் பேசிக் கொண்டி ருந்த போது, அங்கு அத்து மீறி உள்ளே நுழைந்த நபர் கள் அவர் மீது கருப்பு மை யை வீசி எறிந்தனர். பின்பு, அவரை தாக்க முயற்சித்த தாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்க ஒருங்கிணைப் புக்குழு தலைவர் காளிதாஸ் தலைமையேற்றார். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.முரு கன் பேசினார். மேலும் இதில் மாவட்டத் தலைவர் அ.விஜய முருகன், மாவட்ட பொருளா ளர் மனோஜ்குமார், விவசாயி கள் சங்க மாவட்ட நிர்வாகி கள் கே.சுப்பாராஜ், சி.மணிக் குமார், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.