விருதுநகர், பிப்.20- குறைதீர் கூட்டத்தில் பொது மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத அலு வலர்கள் மீது 17 பி சார்ஜ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அதில், இலவச வீட்டு மனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர், வித வைகள் ஓய்வூதியம் உள்ளிட்ட மனுக்களை பொது மக்கள் வழங்கி னர். கூட்டம் தொடங்கியதும், கடந்த வாரம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த மனுக்களின் நிலை என்ன? என்று ஆட்சியர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து எஸ்.பி அலுவலகத்திலிருந்த வந்தி ருந்த இருவர் எழுந்து நின்றனர். அப்போது, ஏன்? இந்த கூட்டத் திற்கு இருவர் வந்துள்ளீர்கள். ஒரு வர் வந்தால் போதுமே எனக் கூறிய ஆட்சியர். கடந்த வாரம் வழங்கிய மனுக்கள் பற்றி கூறுங்கள் ? என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு எஸ்.பி அலுவலக ஊழியர், அனுப்பி வைக்கப்பட்டுள் ளது என பதில் கூறினார். இந்த பதிலால், கோபமடைந்த ஆட்சியர், கடந்த வாரம் முதலமைச்சர் ,ஆட்சி யர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை வைத்து கூட்டம் ஒன்றை நடத்தி னார். அதில் பொது மக்கள் வழங்கும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அது அவர்களடைய வாழ்க்கை. அவர்களின் எதிர்காலம். எனவே, பொது மக்கள் வழங்கும் மனுக்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுங்கள். பதில் கூறுங்கள் என தெரிவித்தார் என்று ஆட்சியர் கூறி னார். அப்போதும், எஸ்.பி அலுவலக ஊழியரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த கூட்டத் திற்கு ஏன்? வருகிறீர்கள். மீண்டும் கோபமடைந்த ஆட்சியர், மனுக் களை வாங்கிக் கொண்டு போய் அங்கு வழங்குவதற்கு நீங்கள் தேவையில்லை. நானே, தபால் மூலம் அல்லது இணையதளம் மூலம் அனுப்பி விடுவேன். பொது மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உரிய முறையில் பதில் தருவ தற்குத் தான் நீங்கள் இங்கு வருகி றீர்கள். இதேபோல் மீண்டும் ஒரு முறை நடைபெற்றால் 17 பி சார்ஜ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால், குறைதீர் கூட்டத் திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் சற்று பதட்டமாகினர்.
சிறுமிக்கு விருது
இதையடுத்து, முனைவர்.எம்.நரேஷ்குமார்-மரு.ஆர்.சித்ர கலா தம்பதியின் மகள் செல்வி.விஷாலினி என்ற சிறுமி ஹைதரா பாத்தில் உள்ள அத்தாப்பூர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸில் படித்து வருகிறார். இவர் வெள் ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் செயல்படும் உயிர் காக்கும் வீட்டினை கண்டு பிடித்துள்ளார். எனவே, ஒன்றிய அரசு, பால் புரஸ்கார் விருதிற்கான பதக்கம், கைகடிகாரம், டேப் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை மாணவிக்கு அனுப்பியுள்ளது. இதையடுத்து,மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன், மாணவி விசா லினிக்கு அவற்றை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், ஆதி திராவிட நலத்துறை அலுவலர் வித்யா, நேர்முக உதவியாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.