districts

மதுரை முக்கிய செய்திகள்

சாத்தூர் அருகே  பட்டாசு ஆலையில் விபத்து

சாத்தூர், மார்ச் 30- விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வர் கதிரேசன் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை முத்துசாமிபுரம் கிராமத்தில் உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலை யில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், புதனன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டி ருந்தனர். பின்பு, தயாரித்த பட்டாசுகளை வெடித்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக, காற்றில் பறந்து வந்த தீப்பொறி தொழிற்சாலையில் காயவைக்கபட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதையடுத்து, அனைத்து பட்டாசு களும் கண் இமைக்கும் நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு அறைகளில் காய வைக்கப் பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இந்த விபத்தானது, மதிய உணவு இடைவேளை யின் போது ஏற்பட்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த  சம்பவம் குறித்து காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.


வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

அருப்புக்கோட்டை, மார்ச்.30- அருப்புக்கோட்டை முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (24). இவரது தாயார் இறந்து விட்டார். எனவே, தந்தை நாக ராஜன் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி யிருந்துள்ளார்.  இந்நிலையில், மார்ச் 29 அன்று பிற்பகல் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த தியாகராஜன், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த தாலி, கம்மல், மாட்டல் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் மற்றும் ரூ.5800 திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தியாகராஜன் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


மின் வயர் திருட்டு

 திருவில்லிபுத்தூர், மார்ச்.30-  திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளம் ஊராட்சி தொட்டியபட்டி கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் அறை கட்டப்பட்டு, அங்கிருந்து மோட்டார் மூலம் கிராமத்திற்கு குடிதண்ணீர் சப்ளை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பம்புசெட்டு அறை அருகே 75 மீட்டர் அளவுள்ள ரூ.5 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பி திருடப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.