திருவில்லிபுத்தூர்,பிப்.21- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள படந்தால் தெற்கு தெருவில் வசிப்பவர் முத்து மகன் செந்தில் குமார் (வயது 33). தச்சு தொழிலாளியான இவருக்கு தீபா என்ற மனைவியும் இரண்டு குழந்தை களும் உள்ளனர். செந்தில் முருகன் ஓசூரில் வேலை பார்க்கும் போது கால் தவறி கீழே விழுந்து இடது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக செந்தில் முருகன் சாத்தூருக்கு வந்து வேலை எதுவும் செய்ய முடியாமல் மது பழக்கத்திற்கு அடிமையா னார். மனைவியிடம் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20- 11- 2017 அன்று ஏற்பட்ட தகராறில் செந்தில் முருகன் தனது மனைவி தீபாவை சமையலறையில் வைத்து கொலை செய் துள்ளார். இது குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் முருகனை கைது செய்து திருவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக் கினை விசாரித்த அமர்வு நீதிபதி பி பகவதி அம்மாள் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் கட்ட தவறி னால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ். ஜான்ஸி ஆஜரானார்.