districts

img

பருப்பு, கடலை எண்ணெய் பாமாயில் விலை குறைந்தது

விருதுநகர், ஜன.7- விருதுநகர் சந்தையில் கடந்த  சில வாரங்கள் வரை விலையில் உச்சத்தை தொட்ட துவரம் பருப்பு,  பாசிப் பருப்பு, உளுந்து, பாமாயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய வற்றின் விலை சற்று குறைந்துள் ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது.

அதன் விபரம் வருமாறு : கடலை எண்ணெய் விலை கடந்த வாரம் 15 கிலோ ரூ.2830 என இருந்த நிலையில் தற்போது ரூ.30 குறைந்துள்ளது. எனவே, இந்த வாரம் டின் ஒன்று ரூ.2800 என விற்பனையாகிறது. பாமாயில் 15 கிலோ கடந்த  வாரம் ரூ.1340 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.15  வரை குறைந்து ரூ.1325 என விற்கப்படுகிறது. துவரம் பருப்பு 100 கிலோ நயம்  புதுசு லையன் வகை கடந்த வாரம் ரூ.14ஆயிரம் என விற்கப்பட்ட நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் மூட்டை ஒன்றுக்கு ரூ.1400 வரை குறைந்துள்ளது.

எனவே, ரூ.12600க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த  வாரம் ரூ.10,300 என விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 மட்டும் குறைந்துள்ளது. எனவே, ரூ.10,200க்கு விற்பனையாகிறது. பட்டாணி பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.6600 என  விற்கப்பட்ட நிலையில் குவிண்  டால் ஒன்றுக்கு ரூ.300 குறைந்துள் ளது. எனவே, மூட்டை  ஒன்று ரூ.6300க்கு விற்கப்படுகிறது. உளுந்து லயன் வகை 100  கிலோ கடந்த வாரம் ரூ.10,200 என விற்கப்பட்டது. இந்த வாரம்  மூட்டைக்கு ரூ.200 வரை குறை ந்து, தற்போது ரூ.10ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, பிற அத்தி யாவசிய உணவுப்பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.