வெம்பக்கோட்டை,
பிப். 17-
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே இராமுத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர் கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 பேர் காயமடைந்த நிலை யில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ளது இராமுத் தேவன்பட்டி. இங்கு சிவ காசியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந் நிலையில், சனிக்கிழமை யன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பட் டாசுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வேதிப்பொருட்களில் உராய்வு
அப்போது, பட்டாசு தயா ரிப்பதற்கான வேதிப் பொருட் களில் ஏற்பட்ட உராய்வு கார ணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்த அறை வெடித்துச் சிதறி தரை மட்டமானது. மேலும், அங்கிருந்து மின்னல் வேகத் தில் கிளம்பிய தீப்பொறி அரு கில் இருந்த பட்டாசு தயா ரிக்கும் அறைகளுக்கும் பர வியது. இதையடுத்து, மேலும் 4 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதுகுறித்து தகவல றிந்து வந்த சிவகாசி, சாத் தூர், வெம்பக்கோட்டை பகு தியைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், பிற பகுதி களுக்கும் தீ பரவவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
10 பேர் பலி; 3 பேர் படுகாயம்
எனினும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் திருவில்லி புத்தூர், திருவேங்கடபுரத் தைச் சேர்ந்த அவைராஜ் (62), சிவகாசி கிளியம்பட்டி யைச் சேர்ந்த ரமேஷ்பாண்டி (26), கருப்பசாமி (29), கீழாண் மறைநாடுவை சேர்ந்த முத்து (50), குருசாமி (50), முனிய சாமி (44), ராமுத்தேவன் பட்டி யைச் சேர்ந்த முருகஜோதி (50), டி.மேட்டூர், ஆலங்குளத் தைச் சேர்ந்த அம்பிகா (29), சாந்தா (43), ஜெயா (58) ஆகி யோர் உயிரிழந்தனர். மேலும், திருவில்லிபுத்தூர் நாச்சியார் பட்டியைச் சேர்ந்த சிவக் குமார் (29), ஆலங்குளத் தைச் சேர்ந்த முத்துக்குமார், இராஜபாளையத்தைச் சேர்ந்த ரெங்கம்மாள் (55) ஆகியோர் படுகாயமடைந்த னர்.
ஆட்சியர் ஆய்வு
இதனிடையே, விபத்து நடைபெற்ற ஆலையை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன், காவல்துறை மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி ஆகி யோர் நேரில் ஆய்வு செய்த னர். அதைத்தொடர்ந்து விபத்து குறித்து மாவட்ட வரு வாய் அலுவலர் தலைமை யில் முழுமையான விசா ரணை செய்து ஆய்வறிக்கை தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தர விட்டார். வெடி விபத்து குறித்து ஆலங்குளம் காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இராமுத்தேவன்பட்டியில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் பலியான 10 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரி ழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந்த வர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.